Friday 15 February 2013

மரங்களே மனிதனின் முதல் தெய்வம் .




இந்த பிரபஞ்சத்தில் மனிதன் மட்டுமல்ல பல்வேறு உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன .  அத்தனை உயிர்களுக்கும் பொதுவான தேவை காற்று ..மாசு படாத காற்று.  ஆம் நமது சுற்று சூழல் எந்தளவுக்கு தூய்மையாக உள்ளதோ அந்தளவுக்கு அணைத்து ஜீவராசிகளுக்கும்   இந்த பூமியானது சொர்க்கமாக  அமையும் . 

இந்த பூமியில் தாவரங்கள் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டுமென்பது படைப்பின் நியதி . இந்த பூமியின் முதல் ஜீவனே பாசி எனப்படும் தாவர இனமே . இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரும் காவலனாக விளங்கிவருபவை மரங்களும் தாவர இனங்களுமே. தாவரங்களின், மரங்களின் அழிவு காரணமாக உலகே வாழத் தகுதியற்றதாகி வருகிறது . அதற்க்கு காரணம்  மனித இனமே.  இன்று மிகப் பெரும் அழிவை நோக்கி செல்லக் காரணம் மரங்களை அவன் அழித்ததே .




இந்தியாவைப் பொருத்தவரை 33% காடுகள் இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் படைப்பு  நியதி, ஆனால் இன்று இருப்பதோ 18% மட்டுமே.  நமது தேவையான மீத 15%  காடுகளை உருவாக நாம் 154 கோடி மரங்களை நடவேண்டும் ,  நட்டே ஆக வேண்டும் , இது நமது ஒவ்வொருவரின் தலையாய மனித நேய,  ஆன்மிக கடமை.

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரம் வளர்க்க வேண்டியது மிக முக்கிய கடமை.  ஆன்மிக தர்மமும் அதுவே.  வாருங்கள் நாம் கரம் கோர்ப்போம் . வனம் உருவாக்குவோம் . நல்ல மனம் உருவாக்குவோம்.


மேலும் விபரங்களுக்கு: 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...