Tuesday 12 February 2013

மஹா கும்பாபிஷேகம்

ஆன்மிக நண்பனின் வாசகர்கள , ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று நாம் ஒரு விசேஷமான திருத்தலத்தின் மஹா கும்பாபிஷேக பத்திரிக்கையுடனும்  அந்த திருத்தலத்தின் முக்கிய  தகவல்களுடனும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

இரத்த சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் நீக்கும் ஓர் அற்புத திருத்தலமே நாகை  மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா ,ஏழு மகளூர் வட்டம்,சப்தகன்னிகாபுரம் ஸ்ரீ அமிர்த நாயகி சமேத ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் .


சப்த கன்னிகைகளான  இந்திராணி, பிராம்மி, கௌமாரி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ரௌத்ரிணி  ஆகியோர் குடி கொண்டு, தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் நல்லாசிகளை அள்ளி வழங்கும் அற்புத திருத்தலம் இது.

இந்த திருத்தலத்தின் மண் மிக சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது. இந்த இறைவன் நஞ்சையே அரு மருந்தாக்கியதால், அவரை வேண்டிக்கொண்டு இங்குள்ள மண்ணை  பூசிக் கொள்ளும் ஒருவருக்கு இரத்த சம்பந்தமான வியாதிகள் அனைத்தும் நீங்கும்  என்பது அபூர்வமான உண்மை.

இத்தகைய மிக சக்திவாய்ந்த இந்த திருக்கோவில் வருகிற தை 29 ஆம் தேதி (11-02-2013) முதல்  மாசி மாதம் 2 (14-02-2013) வரை கும்பாபிஷேகம் காண இருக்கிறது . ஆன்மிக அன்பர்கள் இந்த  அற்புத நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ள இந்த ஆன்மிக நண்பன் அழைக்கிறேன் . வாருங்கள் ...பல்லாண்டு வாழுங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...