Thursday 21 February 2013

நீங்கள் வெற்றி பெற ஓர் அற்ப்புதமான தெய்விக வாய்ப்பு .

ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும் , பைரவரின் காட்சி பெறவும் , உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும் , உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறவும் ஓர் அற்ப்புதமான வாய்ப்பு .

அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது
கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக்  கொண்டு செல்லுங்கள். அடுத்த சில மணித்துளிகள் / நாட்கள் / வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.

மேலும் தகவல்களை ஆன்மிக கடலில் பாருங்கள்.

நன்றி - அய்யா திரு. சிவமாரியப்பன் அவர்கள். திரு .வீரமுனி அவர்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...